*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் ஜனநாயக படுகொலை நடக்கும்’’ - இபிஎஸ் மதுரை: ‘‘ஈரோடு கிழக்கு போன்றே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடக்கும் என்பதால், அத்தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை’’ என மதுரையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் பிவி.கதிரவன் இல்லத் திருமண விழா இன்று நடந்தது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திருமணத்தை நடத்தி வைத்து, மண மக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அதிமுக எழுச்சியோடும், வலிமையோடும் உள்ளது என்பதை இந்த நேரத்தில் சுட்டி காட்டுகிறேன். அதிமுகவுக்கும், ப.சிதம்பரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து அதிமுகவில் எடுத்திருக்கும் முடிவு. அவரது கட்சியில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நடந்தவை உங்களுக்கு தெரியும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்தது. வாக்காளர்களை ஆடு, மாடுகளை போன்று அடைத்து வைத்து திமுக கொடுமைப்படுத்தியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகளை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் மாநில அரசுக்கு துணை போனார்கள்.இடைத்தேர்தலில் அமைச்சர்கள் முகாமிட்டு ஆட்சி அதிகாரம், பண பலத்தை பயன்படுத்தி அதிகமான பரிசு பொருட்களை கொடுத்து தேர்தலில் தில்லுமுல்லு செய்தனர். ஈரோடு கிழக்கு போன்றே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடக்கும் என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. விழுப்புரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு 6000 வாக்குகள் குறைவாகத் தான் கிடைத்தது. விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறுவதற்கு திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை வாரி இரைப்பார்கள். பூத் வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பணத்தை கொடுப்பர். விக்கிரவாண்டியில் ஜனநாயக படுகொலை நடக்கும். சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. ஆகவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இத்தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேறு எந்த காரணமும் இல்லை.AdvertisementAdvertisementஈரோடு கிழக்கில் கூட்டணி கட்சிக்காக 36 அமைச்சர்கள், வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து இருந்தனர். அவர்களை விடுவிக்கவில்லை என்றால் நானே நேரில் வருவேன் என்ன சொன்ன பிறகு வாக்காளர்களை ஊர், ஊராக அழைத்துச் சென்றனர். கடந்த 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் திமுக 38 இடங்களை பிடித்தது. 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களை பிடிக்கும் எனக் கூறினர். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக 75 இடங்களை பிடித்தது. சட்டமன்றத் தேர்தல் வேறு, மக்களவை தேர்தல் என்பது வேறு. மக்கள் தேர்தல்களை பிரித்து பார்த்து வாக்களிக்கின்றனர். 2019-ல் மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும், நிலக்கோட்டையில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையிலும், மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் , மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என பிரித்துப் பார்த்து சிந்தித்து வாக்களிக்கின்றனர். 2014 மக்களவை தேர்தலில் திமுக மிகக் குறைவான இடங்களில் வென்றது. அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை. அது போன்று தான் மாறி, மாறி வெற்றி, தோல்விகள் கிடைக்கும். அரசியல் கட்சிகளை பொறுத்த அளவுக்கு எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி தான் வரும். 2026-ல் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி அதிக இடங்களை வென்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என்று அவர் கூறினார். திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்பி.உதயகுமார், தளவாய் சுந்தரம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையிலுள்ள முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் வீட்டுக்குச் சென்றார். அவரது தாயார் மறைந்ததையொட்டி, சரவணனுக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொல்லையால் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமின்றி, பணிபுரியும் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அந்தச் சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி வேதனை தெர…
படம்
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
தமிழக விளையாட்டுத்துறை மந்திரியும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது     வேலூர் மாவட்டம். காட்பாடி விஷ்ணு திரையரங்கில் நேற்று கோலாகலமாக வெளியீட்டு விழா நடந்தது.  இந்த வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற…
படம்
திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசூல் வேட்டை தர்பார்
திருவண்ணாமலை மாவட்டம் டாஸ்மார்க் மேலாளராக இருப்பவர் செந்தில்குமார் இவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் மீது டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் டாஸ்மாக் சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்கள் நன்கு விற்பனையாகும் கடைகளுக்கு பணி மாறுதல் செய்ய ஒரு பெரும் தொகையை பெற்…
படம்